follow the truth

follow the truth

January, 18, 2025
Homeவிளையாட்டுலங்கா டி10 சுப்பர் லீக் நாளை ஆரம்பம்

லங்கா டி10 சுப்பர் லீக் நாளை ஆரம்பம்

Published on

டி10 சுப்பர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் நாளை(11) ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில் குறித்த தொடரில் ஜஃப்னா டைட்டன்ஸ், ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ், நுவரெலியா கிங்ஸ், கொழும்பு ஜகுவர்ஸ், கண்டி போல்ட்ஸ், மற்றும் காலி மார்வெல்ஸ் ஆகிய 06 அணிகள் பங்குபற்றவுள்ளன.

இதற்கமைய குழு Aவில் ஜஃப்னா டைட்டன்ஸ், ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் மற்றும் நுவரெலியா கிங்ஸ் அணிகளும், குழு Bயில் கொழும்பு ஜகுவர்ஸ், கண்டி போல்ட்ஸ், மற்றும் காலி மார்வெல்ஸ் அணிகளும் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளைக் பிற்பகல் 2.45 மணிக்கு நடைபெறவுள்ள கண்கவர் ஆரம்ப விழாவைத் தொடரந்து ஜெவ்னா டைட்டன்ஸ் அணிக்கும் ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணிக்கும் இடையிலான முதலாவது போட்டி பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகும்.

அதனைத் தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இரண்டாவது போட்டியில் நுவர எலிய கிங்ஸ் அணியும் கலம்போ ஜகுவார்ஸ் அணியும் மோதவுள்ளன.

நாளை இரவு நடைபெறவுள்ள 3ஆவது போட்டியில் கண்டி பொல்ட்ஸ் அணியை கோல் மார்வல்ஸ் அணி எதிர்த்தாடும்.

லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் யாவும் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சங்கா மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு

உலகின் முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 22 முதல்...

அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் : பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. இதைத் தொடர்ந்து,...

ஐசிசி தரவரிசையில் மஹீஷ் தீக்ஷன மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம்

ஐ.சி.சி.யின் ஆடவர் ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுவே...