follow the truth

follow the truth

January, 18, 2025
Homeஉள்நாடுஇஸ்ரேல் சென்றுள்ள இலங்கையர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

இஸ்ரேல் சென்றுள்ள இலங்கையர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

Published on

இஸ்ரேலில் விவசாய தொழில்துறைக்காக சென்றுள்ள இலங்கையர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக

பி.ஐ.பீ.ஏ எனப்படும் இஸ்ரேல் நாட்டு சனத்தொகை, குடிவரவு மற்றும் எல்லை தொடர்பான அதிகார சபையின் பிரதிநிதிகள் அடுத்த வாரம் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் விவசாய தொழில்துறைக்காக சென்றுள்ள இலங்கையர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவினரின் இலங்கை விஜயத்தின் போது இஸ்ரேலுக்கு விவசாய தொழிலில் இணைவதற்காக விண்ணப்பித்தவர்கள் கையொப்பமிட்ட ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இலங்கையிலிருந்து விவசாய துறைக்காக எதிர்காலத்தில் புதிய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுமாயின் அவர்கள் அனைவரும் குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஒப்பந்தத்தை மீறுபவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசன முன்பதிவு மற்றும் முன்பதிவுக் கட்டண மீளளிப்பு தொடர்பான அறிவித்தல்

புகையிரத ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட...

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம் தொடர்பில் ஜனவரி 21 – 22 விவாதம்

பாராளுமன்றம் ஜனவரி 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்...

நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மின்கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தம் நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு...