follow the truth

follow the truth

February, 13, 2025
HomeTOP1பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published on

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் வெலிமடை, பசறை, ஹாலி-எல ஆகிய பகுதிகளிலும் கண்டி மாவட்டத்தின் மெததும்பர, பாததும்பர, உடுதும்பர ஆகிய பகுதிகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம பிரதேசத்திலும், மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல மற்றும் ரத்தோட்ட பகுதியிலும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த பிரதேசங்களிலும் இந்த அறிவிப்பு அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (12) இரவு 8.30 மணி முதல் இன்று (13) இரவு 8.30 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு குறித்த முன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 250ற்கும் அதிகமானோர்  விடுவிப்பு

மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த இலங்கையர் ஒருவர் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 250க்கும்...

சுஜீவ தாக்கல் செய்த மனு செப்டம்பர் 10 விசாரணைக்கு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுஜீவ சேனசிங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க...

டான் பிரியசாத் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட...