follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP1பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published on

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் வெலிமடை, பசறை, ஹாலி-எல ஆகிய பகுதிகளிலும் கண்டி மாவட்டத்தின் மெததும்பர, பாததும்பர, உடுதும்பர ஆகிய பகுதிகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம பிரதேசத்திலும், மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல மற்றும் ரத்தோட்ட பகுதியிலும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த பிரதேசங்களிலும் இந்த அறிவிப்பு அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (12) இரவு 8.30 மணி முதல் இன்று (13) இரவு 8.30 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு குறித்த முன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜம்இய்யா தடையா? – முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் குற்றச்சாட்டுக்கு உலமா சபை தரப்பில் கடும் கண்டனம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதன் வரலாறு முழுவதிலும் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் சமூக உரிமைகள்...

அதிகாரத் திருப்பம் எதிர்க்கட்சியில் – யார் பதவியில் நிற்க, யார் வெளியேறுவர்?

நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியை மறுசீரமைத்து பழைய வலிமைமிக்க நிலைக்குத் திருப்பும் முயற்சியில்...

அஸ்வெசும மேல்முறையீடு தொடர்பிலான விசேட அறிவித்தல்

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்திற்கான மேல்முறையீட்டு காலம் நாளை (21) முடிவடைகிறது. இரண்டாம் கட்டத்திற்காக கிட்டத்தட்ட 30,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக...