follow the truth

follow the truth

February, 15, 2025
HomeTOP2மாணவர்களுக்கு இலவச பாதணிகளுக்கான 3,000 ரூபா வவுச்சர்

மாணவர்களுக்கு இலவச பாதணிகளுக்கான 3,000 ரூபா வவுச்சர்

Published on

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவின் விதந்துரைக்கமைய கீழ்வரும் பாடசாலை மாணவர்கள், பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்குப் பாதணிகளைக் கொள்வனவு செய்வதற்கான 3,000/- ரூபா வவுச்சர் ஒன்றை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று(20) நடைபெற்ற அடைச்சரவையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• 250 மாணவர் தொகைக்குக் குறைவான பாடசாலைகளில் கல்வி பயிலும் 650,000 மாணவர்களுக்கும்

• 250 மாணவர் தொகைக்குக் குறைவான பாடசாலை வகையைச் சாராத நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தோட்டப்பாடசாலை மாணவர்கள் 140,000 பேருக்கும்

• விசேட தேவையுள்ள மாணவர்கள் கல்வி பயில்கின்ற 28 பாடசாலைகளிலுள்ள 2300 மாணவர்களுக்கும்

• பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற 30,000 பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கும்

2015 ஆம் ஆண்டு தொடக்கம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைப் பாதணி வழங்கும் வேலைத்திட்டம் கல்வி அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் வரைக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களும் குறித்த வேலைத்திட்டத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

UNP உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (14) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்...

மஹபொல புலமைப்பரிசிலை காலதாமதம் இன்றி முறையாக வழங்க நடவடிக்கை

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற...

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டுக்கு பரிந்துரைக்க நிபுணர் குழு

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிபுணர் குழுவில்...