follow the truth

follow the truth

February, 13, 2025
Homeஉள்நாடுஅதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 20 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 20 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published on

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிய நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்று (23) கொழும்பு மாவட்டத்தில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், பொரளை, நுகேகொடை, வெள்ளவத்தை, தெஹிவளை, ரத்மலானை, மொரட்டுவ, பத்தரமுல்ல, கொஹுவல, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, வெல்லம்பிட்டிய, கடுவெல, ஹன்வெல்ல, அவிசாவெல்ல, படுக்க மற்றும் கொடகம ஆகிய நகரங்களில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 20 வர்த்தகர்களை கண்டறிந்துள்ளனர்.

அதே நேரத்தில் அரிசியை மறைத்து வைத்திருந்த ஒரு வியாபாரி மற்றும் காலாவதியான அரிசியை சேமித்து வைத்திருந்த ஒரு கடையையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்நிலையில், குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் இரவு நேர சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டான் பிரியசாத் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட...

புற்றுநோயால் வருடாந்தம் சுமார் 250 சிறுவர்கள் உயிரிழப்பு

புற்றுநோயால் வருடாந்தம் 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர்,  நிணநீர் சுரப்பி புற்றுநோய், எலும்பு புற்றுநோய்...

எதிர்காலத் செயற்திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும்...