ரஷ்யாவின் கம்சட்கா பிராந்திய கடற்கரைக்கு அருகில் இன்று (ஜூலை 20) காலை கடும் நிலநடுக்கம் பதிவானது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவில் பதிவாகியுள்ளது என்று யூரோ-மத்திய தரைக்கடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் பூமியின் 20 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியதாகவும், ஆரம்பத்தில் இதன் அளவு 6.7 ரிக்டராக மதிப்பீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்திற்கு பின்னர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதால், எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.