நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (20) காலை 10.00 மணியளவில் எச்சரிக்கை அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நாளை (ஜூலை 21) காலை 10.00 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக, மேற்கூறிய மாகாணங்களில் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், நாட்டின் பிற பகுதிகளில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஒரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.