ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன், ரசிக விதானவை ஓகஸ்ட் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்று (20) மத்துகம நீதவான் அசங்க ஹெட்டியாவத்த முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போலி ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட்ட ஜீப் வண்டி தொடர்பான இரகசிய தகவல், பதில் பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்ததை அடுத்து, வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணையின் பேரில் ஜூலை 19 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.
வாகன பதிவு மற்றும் ஆவணங்களில் முறைகேடு தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பிரிவுகள் தெரிவித்துள்ளன.