follow the truth

follow the truth

July, 19, 2025
Homeஉள்நாடுகுத்தகை அடிப்படையில் விமானங்கள் கொள்வனவு

குத்தகை அடிப்படையில் விமானங்கள் கொள்வனவு

Published on

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு  குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 6 அல்லது 7 விமானங்களின் காலம் நிறைவடைகின்றமையினால், புதிதாக குத்தகை அடிப்படையில் விமானங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

அடுத்த மூன்று மாதங்களில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மூலம் சிறப்பான சேவையை வழங்கவுள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா விமான நிலையத்திற்கு சொந்தமாக எந்தவொரு விமானமும் இல்லை என தெரிவித்த அமைச்சர், அனைத்து விமானங்களும் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டவை எனவும் அவ்வாறான 24 விமானங்கள் உள்ளதாகவும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 25 வரை பலத்த காற்று வீசக்கூடும்

தென்மேற்கு பருவ பெயர்ச்சி அதிகரிப்பு காரணமாக நாட்டில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பலத்த காற்று வீசக்கூடும்...

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் அங்கத்தவரான ‘கல் இப்பா’ கைது

களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள், மத்துகம, போபிட்டிய பகுதியில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் அங்கத்தவரான 'கல் இப்பா' என...

பாடசாலை செல்லும் மாணவிகளிடையே கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு

சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா...