இலங்கை முழுவதும் ஆண், பெண் இருபாலருக்கும் பெருங்குடல் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரி நேற்று(03) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆலோசகர் கிளினிக்கல் ஆன்காலஜிஸ்ட் டாக்டர் ஜெயக்குமரன் கூறுகையில், இந்த நாட்டில் ஆண் மக்களிடையே மிகவும் பொதுவான அபாயகரமான புற்றுநோயானது ஓரோபார்ஞ்சீயல் புற்றுநோயாகும் (Oropharyngeal Cancer).
நுரையீரல் புற்றுநோய் ஆண்கள் மத்தியில் இரண்டாவது மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும்.
மார்பக புற்றுநோயானது பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாகும், அதைத் தொடர்ந்து தைராய்டு புற்றுநோய் உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் பல வண்ண பழங்களை உட்கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.