கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரீஸ் கடற்கரையில் இருந்து 47 நாட்டிகல் மைல் தொலைவில் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடல் சீற்றம் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் படகில் வந்தவர்களில் குறைந்தபட்சம் 78 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கடல் சீற்றம் காரணமாக மீட்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடலில் மூழ்கியவர்கள் குறித்த சரியான தகவல் இன்னும் உறுதியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.
இந்தப் படகில் எகிப்து, சிரியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருந்துள்ளனர் என் தெரிவிக்கப்படுகின்றன.