follow the truth

follow the truth

July, 19, 2025
HomeTOP1கப்பல் விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழு இன்று கூடுகிறது

கப்பல் விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழு இன்று கூடுகிறது

Published on

இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த நியூ டயமண்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்கள் தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்ற விசேட குழு இன்று (20) முதன்முறையாக கூடவுள்ளது.

இந்த குழு இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

Express Pearl மற்றும் New Diamond கப்பல் விபத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்த தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அந்த கோரிக்கையின் பிரகாரம் அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஏற்பாடு செய்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60...

ஜகத் விதான எம்.பியின் மகன் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது...

மலையகத்தில் மழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றமையினால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெருந்தோட்டத்...