follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP1அலி சப்ரி ரஹீம் மீதான சுங்க விசாரணை அறிக்கை சபாநாயகரிடம்

அலி சப்ரி ரஹீம் மீதான சுங்க விசாரணை அறிக்கை சபாநாயகரிடம்

Published on

பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பான சுங்க விசாரணை அறிக்கையை சபாநாயகர் இன்று (18) சமர்ப்பிக்க உள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 30 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் சபாநாயகரிடம் தீர்மானம் ஒன்றை கையளித்துள்ளனர்.

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

உள்ளூராட்சி மன்ற வாக்கெடுப்பை அழைப்பதில் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறியதா என்பதை கண்டறிய விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்கும் யோசனையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும்...

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...