follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP1சுகாதார சர்ச்சைகள் குறித்து சுகாதார அமைச்சர் இன்று நாடாளுமன்றில் விசேட உரை

சுகாதார சர்ச்சைகள் குறித்து சுகாதார அமைச்சர் இன்று நாடாளுமன்றில் விசேட உரை

Published on

சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்று (18) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்தமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் ஆராய ஏழு பேர் கொண்ட குழுவொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் தேதுனு டயஸ் அதன் தலைவராக செயற்படுகிறார்.

குழுவின் அறிக்கை 3 வாரங்களுக்குள் அளிக்கப்படும்.

அண்மைய நாட்களில், இந்த நாட்டில் பல தடுப்பூசிகள் போடப்பட்ட பின்னர் பலியாகிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பண்டுவஸ்நுவர யுவதியின் மரணம் மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவரின் மரணம் மிக நெருக்கமான சம்பவங்களாகும்.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் அவ்வப்போது 64 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை கருவிகளை அகற்றி அல்லது தற்காலிகமாக நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காணப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும்...

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...