புதுடெல்லியில் HCL லிமிடெட் நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாகிகளை சந்தித்த ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கையின் 5,000 தகவல் தொழில்நுட்ப துறை திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாக, ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான HCL லிமிடெட் உடன் தொழிற்நுட்ப துறையை விரிவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் வகையில் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இலங்கையின் 5,000 தகவல் தொழில்நுட்ப துறை திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தியதுடன், ஆளுநரின் முன்மொழிவானது HCL லிமிடெட் நிறுவனம் மத்தியில் பெரும் வரவேற்ப்பினையும் பெற்றுள்ளது. மேலும் , HCL லிமிடெட் நிறுவனமானது இலங்கையில் தங்களது செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், இலங்கை அரசாங்கம் பல்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது.