follow the truth

follow the truth

July, 21, 2025
HomeTOP1லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு

Published on

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இன்று (19) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையில் உள்ள விசேட வைத்தியர் ஒருவரின் தன்னிச்சையான செயற்பாட்டிற்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

“லேடி ரிஜ்வே குழந்தைகள் நல வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையால் ஏற்பட்ட பிரச்சினை தற்போது இழுபறி நீடிக்கிறது. வைத்தியசாலை பணிப்பாளரின் இயலாமையால், பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்கிறது. பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இப்பிரச்சினையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கொண்டு செல்ல வேண்டியிருந்தது.

அவர் ஒருவார கால அவகாசம் கேட்டார்.இப்போது மூன்று வாரங்கள் கடந்துள்ளது. இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றி தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதுவரை இப்பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் அவசர சிகிச்சை தொடர்கிறது” என்றார்.

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரியவிடம் வினவியபோது, ​​வேலை நிறுத்தம் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும்...

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...