follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP1"நான் அனுபவித்து முடித்துவிட்டேன், இரத்து செய்வது நல்லது"

“நான் அனுபவித்து முடித்துவிட்டேன், இரத்து செய்வது நல்லது”

Published on

நிறைவேற்று ஜனாதிபதி பதவியை தாம் அனுபவித்து முடித்துவிட்டதாகவும் அதனை இல்லாதொழிப்பது நல்ல விடயம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி – அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது?

பதில் – அரசியல் சூழ்நிலை நன்றாக உள்ளது

கேள்வி – இப்போது இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க விரும்புகிறீர்களா?

பதில் – எந்த பிரச்சினையும் இல்லை

கேள்வி – உங்களுக்கு அதில் ஆட்சேபனைகள் இல்லையா?

பதில் – நான் இப்போது அனுபவித்து முடித்துவிட்டேன். ஆனால் அவர்கள் அதை இரத்து செய்தால் நல்லது. இன்று முழு நாடும் அதை ஒழிக்கச் சொல்லப்படுகிறது.

கேள்வி – இது தேர்தலை ஒத்திவைக்கும் பொறி என்கிறார்கள்.?

பதில் – இருக்கலாம். ரணிலை நாங்கள் நன்கு அறிவோம்.

கேள்வி – ஜனாதிபதி தேர்தல் குறித்து என்ன நிலவரம்?

பதில் – எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம். ஜனாதிபதி தேர்தலில் கூட எமது வேட்பாளர் வெற்றி பெறுவார். பொதுத் தேர்தலில் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

கேள்வி – அநுரவின் இந்தியப் பயணம் பற்றி?

பதில் – நல்லது. இந்தியா நமது அண்டை நாடு. அவர்களும் நட்புறவுடன் இருக்க வேண்டும். தாமதமாகியாவது புரிந்தது பெரிய விடயம்..

கேள்வி – ஜே.வி.பி அலை பற்றி என்ன?

பதில் – ஜே.வி.பி அலையாக உருவெடுத்து இப்போது உடைந்து விட்டது..

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும்...

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...