follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP1பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published on

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் வெலிமடை, பசறை, ஹாலி-எல ஆகிய பகுதிகளிலும் கண்டி மாவட்டத்தின் மெததும்பர, பாததும்பர, உடுதும்பர ஆகிய பகுதிகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம பிரதேசத்திலும், மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல மற்றும் ரத்தோட்ட பகுதியிலும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த பிரதேசங்களிலும் இந்த அறிவிப்பு அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (12) இரவு 8.30 மணி முதல் இன்று (13) இரவு 8.30 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு குறித்த முன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...

ஜகத் விதானவின் மகன் விளக்கமறியலில்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன், ரசிக விதானவை ஓகஸ்ட் 1...