follow the truth

follow the truth

July, 19, 2025
HomeTOP1ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் பெரும் தீ விபத்து: 50 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் பெரும் தீ விபத்து: 50 பேர் உயிரிழப்பு

Published on

ஈராக்கின் வாசித் மாகாணத்தில் உள்ள அல்-குட் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இன்று (17) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து தொடர்பான தொடக்க விசாரணை முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசித் மாகாண ஆளுநர் முகமது அல்-மியாஹி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியதுடன், தீ விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் பெரும்பகுதி முழுவதுமாக எரிந்த நிலையில், புகை மூட்டங்கள் வெளியேறுவதைக் காண்பிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60...

கியூபாவில் தொழிலாளர்துறை அமைச்சர் இராஜினாமா

கியூபாவில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றில் அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை அமைச்சர் மார்த்தா எலினா பீடோ...

பாடசாலை செல்லும் மாணவிகளிடையே கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு

சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா...