follow the truth

follow the truth

July, 19, 2025
HomeTOP2500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும்

500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும்

Published on

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் எனவும் தேயிலையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள சிறு தேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,”கடந்த காலங்களில் தேயிலை தொழிற்துறையை முன்னேற்றுவதாக குறிப்பிட்டு சர்வதேச நாடுகளில் விளம்பரங்கள் வெளியிடுவதற்காக மாத்திரம் ரூ. 1965 இலட்சம் (19.65 கோடி) பணம் செலவிடப்பட்டுள்ளது.

உலக வங்கியிடம் மாத்திரம் 48.9 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 60 வேலைத்திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. இந்த திட்டங்களுக்காக, முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மனைவி, லக்ஷ்மன் செனவிரத்னவின் மகன் மற்றும் சாலிய திசாநாயக்கவின் மனைவி ஆகியோரே பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

மேலும், தரமான தேயிலையை உற்பத்தி செய்யும் விதம், தேயிலை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் உரையாற்றிய அமைச்சர், இலங்கை தேயிலை நாமத்தை உயர்நிலைக்கு கொண்டு செல்வதற்காக அனைவரும் இணைந்து செயற்படுவோம் என்றும் அழைப்பு விடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60...

ஜகத் விதான எம்.பியின் மகன் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது...

மலையகத்தில் மழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றமையினால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெருந்தோட்டத்...