follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP1வத்தளை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை

வத்தளை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை

Published on

வத்தளை, ஹேகித்தை மற்றும் அல்விஸ்வத்தை பகுதிகளில் நேற்று (19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர், வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில், முகமூடி அணிந்த நால்வர் முச்சக்கர வண்டியில் வந்து, வீட்டிற்குள் நுழைந்து அவரை தாக்கி கொலை செய்துள்ளனர்.

சம்பவத்தின் போது, உயிரிழந்தவரின் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் இருந்துள்ளனர் என தெரிய வருகிறது.

கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 43 வயதான இந்த நபர், சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வீட்டை வாடகைக்கு எடுத்து தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளில், 2023 ஆம் ஆண்டு மஹாபாகே பகுதியில் இடம்பெற்ற ஒரு சுட்டுக்கொலைச் சம்பவத்தில், இவர் உதவியவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. வத்தளை பொலிஸாரும், களனி பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...

ஜகத் விதானவின் மகன் விளக்கமறியலில்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன், ரசிக விதானவை ஓகஸ்ட் 1...