follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP2மோதலுக்குள் முயற்சியின் ஒளி - காசா மாணவர்கள் எதிர்கொள்கிற பரீட்சை பயணம்!

மோதலுக்குள் முயற்சியின் ஒளி – காசா மாணவர்கள் எதிர்கொள்கிற பரீட்சை பயணம்!

Published on

ஆதரவுடன் நடத்தப்படும் காசா மனிதாபிமான அறக்கட்டளை மூலம் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.

அங்கு உணவுக்காகக் காத்திருப்பவர்கள் மீது துப்பாக்கிச்சூடு, பீரங்கி மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் படுகொலைகளை செய்து வருகிறது.

ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் பட்டினியின் விளிம்பில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சில நாட்களுக்கு ஒருமுறை ஏதாவது சாப்பிடுகிறார்கள். சுத்தமான தண்ணீர் இல்லாமல் தொற்று நோய்கள் பரவி வேகமாக பரவி வருகின்றன.

இதற்கிடையே நேற்று, இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில், காசாவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் மேல்நிலைப் பாடசாலை பரீட்சைகளை எழுதினர்.

ஒக்டோபர் 2023க்குப் பிறகு காசாவில் பரீட்சைகள் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை. 1,500 மாணவர்கள் வரை பரீட்சை எழுதியதாக தெரிகிறது.

காசா கல்வித் துறை இந்த பரீட்சை சிறப்பு மென்பொருளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக தெரிவித்தது.

பல்கலைக்கழகப் படிப்பு கனவை நோக்கிய முதல் படி இந்த பரீட்சை. இணையம் மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் கிடைக்கக்கூடிய இடங்களில் பரீட்சையினை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும்...

பிள்ளையான் தொடர்பான தகவல்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – ஆனந்த விஜேபால

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பான சில முக்கிய விடயங்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள்...

கொழும்பு விஜேராம மாவத்தை மஹிந்த வீட்டில் இரகசிய சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகையை, இலங்கை பொதுஜன பெரமுன சார்ந்த...