follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP220 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்

Published on

சவூதி அரேபியாவின் ‘தூங்கும் இளவரசர்’ என அழைக்கப்பட்ட இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல்அஜிஸ், 20 ஆண்டுகளாக இருந்த கோமா நிலையில் இருந்து மீளாமல், தனது 36-வது வயதில் உயிரிழந்தார்.

2005ஆம் ஆண்டு, லண்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் படித்து வந்த காலத்தில் ஏற்பட்ட கார்விபத்தில் மூளையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் அவர் கோமா நிலையில் சென்றார். அதன்பின்னர் சவூதியின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அஜிஸ் மருத்துவ நகரில், வெண்டிலேட்டர் உதவியுடன் கடந்த இருபது ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தார்.

இளவரசரின் தந்தையான இளவரசர் காலித் பின் தலால் பின் அப்துல்அஜிஸ் தனது மகனின் மறைவை உறுதிப்படுத்தி, “அல்லாஹ்வின் விதியும் ஆணையும் என்பதை நம்பிக்கையுடன் ஏற்று, ஆழ்ந்த துக்கத்துடன் என் அன்பு மகனின் உயிரிழப்பை அறிவிக்கிறேன். அல்லாஹ் அவருக்கு பரிசுத்தமான இரக்கம் அளிக்கட்டும்” என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இளவரசரின் மறைவு, சவூதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும்...

பிள்ளையான் தொடர்பான தகவல்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – ஆனந்த விஜேபால

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பான சில முக்கிய விடயங்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள்...

கொழும்பு விஜேராம மாவத்தை மஹிந்த வீட்டில் இரகசிய சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகையை, இலங்கை பொதுஜன பெரமுன சார்ந்த...