follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP2முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் காணி மோசடி

முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் காணி மோசடி

Published on

கடந்த 2019ஆம் ஆண்டு காலமான முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் பெயருடன் தொடர்புடைய ஒரு காணி மோசடி விவகாரம் விரைவில் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளதாக நீர்ப்பாசன பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சாலிந்த திசாநாயக்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கின் ஆட்சி காலத்தில் காணி அபிவிருத்தி பிரதியமைச்சராக பதவி வகித்திருந்தார். அந்த காலகட்டத்தில், அவரது மனைவி தலைவியாக இருந்த விவசாயிகள் கூட்டுறவுக் கழகத்திற்கு அரசாங்கத்தின் சொந்தமான 76 ஏக்கர் நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு ஒப்படைத்திருந்தார்.

பிரச்சினையானது, அந்த நிலம் அரசாங்கத்தால் ஏற்கனவே சுமார் ஐந்து கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த நிலத்தை பெரிதும் நஷ்டமின்றி அரசுக்கு குத்தகைத் தொகையாக ஏதும் செலுத்தாமலே பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை எந்தவொரு தொகையும் அரசுக்கு செலுத்தப்படாத நிலையில், இந்த விவகாரம் குறித்து லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் ரணசிங்க கூறியுள்ளார்.

மேலும், சாலிந்த திசாநாயக்கவின் மனைவி மஞ்சுளா திசாநாயக்க, கடந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்ததையும் குறிப்பிடலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும்...

பிள்ளையான் தொடர்பான தகவல்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – ஆனந்த விஜேபால

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பான சில முக்கிய விடயங்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள்...

கொழும்பு விஜேராம மாவத்தை மஹிந்த வீட்டில் இரகசிய சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகையை, இலங்கை பொதுஜன பெரமுன சார்ந்த...