வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த விசாரணை, குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) உதவியுடன் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெண்டி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“கடந்த காலங்களில் பதிவான பெரும்பாலான யானைகளின் உயிரிழப்புகள் காப்பகங்களுக்கு வெளியே நிகழ்ந்துள்ளன. இது ஒரு சோகமான மற்றும் கவலைக்கிடமான சூழ்நிலை. அதனால்தான் நாங்கள் இந்த விசாரணையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.”
காட்டு யானைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும், குற்றவாளிகளை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.