follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP1உத்தேச பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று

உத்தேச பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று

Published on

பாராளுமன்றத்தினதும் உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் சம்பந்தப்பட்ட கருமக்களை விசாரிப்பதற்கும் அதுதொடர்பாக பொருத்தமான விதப்புரைகளை மேற்கொள்வதற்குமான பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணையை இன்று(18) பாராளுமன்றத்தில் சர்ப்பிக்க உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

உத்தேச பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று முன்வைக்கப்படவுள்ளதாகவும், அது தொடர்பான விவாதத்தை வேறொரு நாளில் நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, கடந்த 7 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய இன்று(18) ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற அமர்வு வாரத்தின் பாராளுமன்ற அலுவல்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும்...

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...