follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுதேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க இன்று முதல் நடவடிக்கை

தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க இன்று முதல் நடவடிக்கை

Published on

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொருட்களை விடுவிப்பதற்கான பட்டியல் இன்று மத்திய வங்கியிடம் கையளிக்கப்படும் எனவும் பட்டியல் கையளிக்கப்பட்டதன் பின்னர் படிப்படியாக பொருட்கள் விடுவிக்கப்படும் எனவும் அமைச்சர் ந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலத்தில் சதொச விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர் ஒருவர் கொள்வனவு செய்யக்கூடிய அரிசியின் அளவு இன்று முதல் 10 கிலோகிராமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சதொச நிவாரணப் பையில் சீனியை கொள்வனவு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு மேலதிகமாக இரண்டு கிலோகிராம் அரிசியை வழங்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார்...