follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP1கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

Published on

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

போரா மாநாடு இன்று(25) கொழும்பு கோட்டையில் உள்ள டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு 25 மற்றும் 27 முதல் ஜூன் 05 வரை நடைபெறவுள்ளது.

அதற்கமைய குறித்த தினங்களில் காலை 7:00 முதல் இரவு 10:00 மணி வரை மருதானை டார்லி வீதி, காமினி சுற்றுவட்டத்திலிருந்து டி.ஆர். விஜயவர்தன மாவத்தைக்கு கொள்கலன் வாகனங்கள், கல், மணல் ஏற்றப்பட்ட டிப்பர் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் நுழைவு மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதேபோல் 27 முதல் ஜூன் 05 வரை காலை 07:00 முதல் காலை 11:30 வரை மற்றும் பிற்பகல் 03:00 முதல் இரவு 10:00 மணி வரையும் பம்பலப்பிட்டி போரா முஸ்லிம் பள்ளிவாசலில் போரா மாநாடு நடைபெறவுள்ளது.

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள கிளென் ஆபர் திசைக்கு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு, காலி வீதியிலிருந்து கிளென் ஆபர் பகுதிக்கு நுழைந்து கடற்கரை வீதிக்கு போக்குவரத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மத்திய கிழக்கு பதற்ற நிலை – 4 பேர் கொண்ட அமைச்சரவை உப குழு

மத்திய கிழக்கின் நிலைமை, இலங்கையை எவ்வாறு பாதிக்கலாம் என்பதை மதிப்பிட்டு பரிந்துரைகளை வழங்குவதற்காக 4 பேர் கொண்ட அமைச்சரவை...

இஸ்ரேலுக்குச் செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

பல இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான சர்வதேச சேவைகளை மீண்டும்...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிப்பதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பகிடிவதை செய்த சம்பவத்தின் அடிப்படையில்...