follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

Published on

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்துகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார்...