follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள்  இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை - ஜனாதிபதி

தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள்  இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை – ஜனாதிபதி

Published on

தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள்  இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தாம் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 90 சதவீதமானவை விடுவிக்கப்பட்டதாகவும், இன்னும் விடுவிக்கப்படாத காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளை சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அமைய விடுவிப்பதற்குக் கடந்த நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எதிர்காலத்திலும் அவ்வாறான பலரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பயங்கரவாத தடை சட்டத்தில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வால் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதத்தை விட僅தளமாக உயர்ந்துள்ளதால், இந்த மாதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை...

அணுசக்தி விபத்துகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பு

அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...