follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுஇலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு இழப்பீடு

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு இழப்பீடு

Published on

இலங்கை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்புகுறித்து தமிழக அரசு நேற்று(21) வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு இப்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 108 விசைப் படகு உரிமையாளர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும், 17 நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு தலா ஒன்றரை இலட்சம் ரூபாவும் என மொத்தமாக 5 கோடியே 66 இலட்சம் ரூபா வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதேநேரம், இலங்கைச் சிறையில் தடுத்த வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து மீனவ சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, தமிழக மீன்வளத் துறை அமைச்சரும், மீனவ சங்கப் பிரதிநிதிகளும் நேரில் சந்திப்பதற்கான நேரத்தைப் பெற்றுத்தர, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழு துணைத் தலைவர் கனிமொழியை முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அணுசக்தி விபத்துகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பு

அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...