follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுதந்தையை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை – ஓஷல ஹேரத்

தந்தையை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை – ஓஷல ஹேரத்

Published on

பொரளை தேவாலயமொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தமது தந்தையை சந்திப்பதற்கு சட்டத்தரணிகளுக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி 75 வயதான தமது தந்தை, சகோதரி, மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் வீட்டிலிருக்கும் போது பொலிஸ் அதிகாரிகள் என்று கூறி சிலர் வந்ததாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் வீட்டில் இருந்தவர்களின் தொலைத்தொடர்பு சாதனங்களை பறிமுதல் செய்ததையடுத்து, தமது தந்தையை அழைத்துச்சென்றதாக ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.

தமது தந்தையிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்தபோதும் இதுவரை தமது தந்தை தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை என  ஓஷல ஹேரத் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...