பொரளை தேவாலயமொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தமது தந்தையை சந்திப்பதற்கு சட்டத்தரணிகளுக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி 75 வயதான தமது தந்தை, சகோதரி, மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் வீட்டிலிருக்கும் போது பொலிஸ் அதிகாரிகள் என்று கூறி சிலர் வந்ததாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் வீட்டில் இருந்தவர்களின் தொலைத்தொடர்பு சாதனங்களை பறிமுதல் செய்ததையடுத்து, தமது தந்தையை அழைத்துச்சென்றதாக ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.
தமது தந்தையிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்தபோதும் இதுவரை தமது தந்தை தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை என ஓஷல ஹேரத் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Ma'am @mbachelet my father (75yrs) is now detained for 22 days without proper lawyer access. My father's matter is best example of abuse of PTA law by police. Bringing minor amendments to the act won't prevent abuse of said law. Our family is worried for his life. @UNHumanRights pic.twitter.com/teu346Deyx
— Oshala Herath (@OshalaHerath) February 7, 2022