follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுவிருந்துபசாரங்கள் தொடர்பில் பொலிஸாாின் அதிரடி அறிவிப்பு!

விருந்துபசாரங்கள் தொடர்பில் பொலிஸாாின் அதிரடி அறிவிப்பு!

Published on

இளைஞர்களை இலக்கு வைத்து சட்டவிரோதமாக விருந்துபசாரங்களை நடத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இதுதொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளனா்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

காதலர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களை இலக்கு வைத்து வெவ்வேறு இடங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்து, அவற்றினூடாக போதைப்பொருள் வியாபாரம் செய்வதற்கு வியாபாரிகள் ஒன்றிணையக் கூடும். அதனால், தமது பொலிஸ் பிரிவுகளில் சந்தேகத்துக்கிடமாக குறிப்பாக போதைப்பொருள் பயன்படுத்தும்  விருந்துபசாரங்கள், போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்கள் போன்ற இடங்களை உடனடியாக சுற்றிவளைக்குமாறு நாடுபூராகவுமுள்ள சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளோம்.

அதேபோன்று, அவ்வாறான இளைஞர்களை தேடிப்பார்த்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளிலும் கடமையாற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார்...