follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுவாகன மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

வாகன மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

Published on

வாகனங்களை கொள்வனவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணம் செலுத்தாமல் நம்பிக்கை மீறல் 03 வழக்குகள் தொடர்பில் நுகேகொடை  மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜனபிரிய மாவத்தை பகுதியில் வைத்து சந்தேக நபர் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீர்கொழும்பில் வசிக்கும் ஒருவரிடமிருந்து 450 இலட்சம் ரூபாபெறுமதியான ஜீப் வண்டியையும், அத்துருகிரிய பிரதேசத்தில் வசிப்பவரிடமிருந்து 225 இலட்சம் ரூபா பெறுமதியான கெப் வண்டியையும், ஜா-எல பிரதேசத்தில் வசிப்பவரிடமிருந்து 185 இலட்சம் ரூபா பெறுமதியான காரையும் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதான ராகம பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், நுகேகொடை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இலங்கையில்

உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலோன் மஸ்க், தனது "X" (முன்னதாக Twitter) கணக்கில், 'ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது...