follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடு07 எளிய சிங்கள திரிபீடக நூல்கள் வெளியீடு

07 எளிய சிங்கள திரிபீடக நூல்கள் வெளியீடு

Published on

பௌத்த விவகார திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் திரிபிடக நூல் திருத்தக்குழுவினால் மொழிபெயர்க்கப்பட்ட 07 திரிபிடக நூல்கள் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (24) அலரி மாளிகையில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டது.

புத்த ஜயந்தி திரிபிடக சபையின் நீட்சியாக நியமிக்கப்பட்ட திரிபிடக நூல் திருத்தக்குழு பல ஆண்டுகளாக, திரிபிடக நூலின் மொழிப்பெயர்ப்பு அடிப்படை பௌத்த மொழிக்கு தீங்கு ஏற்படாத வகையிலும் அர்த்தம் மாறாத வகையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுருக்க திரிபிடக நூல் தொகுதி எண் 20 முதல் 27 வரை சிங்கள மகாநித்தேச பாலி, சிங்கள சுல்லனித்தேச பாலி, சிங்கள படிசம்பிதாமக்கப்பகரன பாலி – 1, சிங்கள படிசம்பிதாமக்கப்பகரன பாலி – 2, சிங்கள தேர அபதன பாலி – 2, சிங்கள தேரி அபதன பாலி – 2 சிங்கள புத்தவங்ஷ பாலி மற்றும் சரியா பிடக பாலி என 07 நூல்கள் இவ்வாறு வெளியிடப்பட்டன.

பிரதமரினால் திரிபிடக நூல் திருத்தக் குழுவின் உறுப்பினர் ராஜகீய பண்டித – அக்கமஹா பண்டித, இலங்மை அமரபுர ஸ்ரீ தர்மரக்ஷித மஹாநிகாயவின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய திருகோணமலை ஆனந்த தேரர் உள்ளிட்ட வருகைத்திருந்த மஹாநாயக்கர்களுக்கு இந்நூல் வழங்கப்பட்டது.

புத்த ஜெயந்தி நூலின் சிங்கள மொழிப்பெயர்ப்பு மிகவும் துல்லியமாக இருந்தாலும், அதன் சொற் பிரயோகங்கள் சராசரி வாசகனுக்கு மிக ஆழமாக இருந்ததால், அந்த நூல் பட்டியல்களை மிக எளிமையாகவும் எளிதாகவும் தொகுத்ததன் விளைவாக இந்த சுருக்கமான திரிபிடக நூல் தொகுப்பு வெளியிடப்பட்டது.

புத்தசாசன சமய மற்றும் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களினால் நூல்கள் குறியீட்டு ரீதியாக மஹாசங்கத்தினருக்கு வழங்கிவைக்கப்பட்டது.

No photo description available.

May be an image of 1 person, sitting and indoor

No photo description available.

May be an image of 2 people and people standing

May be an image of 6 people, people sitting, people standing and indoor

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...