follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்ஐந்தாவது நாளாக தொடரும் போா்

ஐந்தாவது நாளாக தொடரும் போா்

Published on

உக்ரைனுக்கும் ரஷ்யவுக்கும் இடையிலான போா், ஐந்தாவது நாளாக நடைபெற்று வரும்நிலையில் அணு ஆயுத தடுப்புப் படையினரும் தயார் நிலையில் இருக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் நாட்டின்இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரத்தை பிடித்ததாக ரஷ்ய படை அறிவித்திருந்தது. ஆனால் உக்ரைன் படைகள் அந்த நகரை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்ய படைகள், கார்கிவ் நகருக்கு கிழக்கே எரிவாயு குழாயை வெடிக்கச்செய்தன. பெரும் மோதல்கள், தெருச்சண்டைகளுக்கு பின்னர் இந்த நகரை ரஷ்ய படைகள் வசப்படுத்தி விட்டன என தகவல்கள் வெளிவந்தன. ஆனால் உக்ரைன் படைகள் தளராமல் மீண்டும் போராடி அந்த நகரை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்து விட்டன. இதை கார்கிவ் பிராந்திய கவர்னர் உறுதி செய்துள்ளார்.

இதனிடையே பெலாரஸ் நாட்டின் ஹோமெல் நகரில் ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு உக்ரைன் சம்மதித்துள்ளது. இதை உக்ரைன் அரசு நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன்படி பெலாரஸ் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒரு குழுவை அனுப்புவதை உறுதி செய்துள்ளது.

தற்போது ஐந்தாவது, நாளாக போர் நடைபெற்று வரும்நிலையில் அணு ஆயுத தடுப்புப் படையினரும் தயார் நிலையில் இருக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பெலாரஸ் நாட்டின் ஹோமெல் நகரில் இன்று நடைபெறவுள்ள பேச்சு வார்த்தையில் போர் நிறுத்தம் உள்ளிட்ட பல முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...