follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுபிரதி சபாநாயகர் பதவியில் நீடிக்கவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு

பிரதி சபாநாயகர் பதவியில் நீடிக்கவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு

Published on

கடந்த தினம் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறித்த பதவியில் இருந்து தொடர தீர்மானித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று  விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரண்டு நிபந்தனைகளின் கீழ் இந்த தீர்மானத்தை எடுப்பதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதன்போது தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் மாத்திரம் பதவியில் நீடிப்பதே தனது முதலாவது நிபந்தனை என ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

ஏப்ரல் 05ஆம் திகதி ராஜினாமா கடிதத்தை கையளித்ததில் இருந்து பிரதி சபாநாயகர் பதவியின் சிறப்புரிமைகள் எதனையும் பயன்படுத்தப் போவதில்லை என தனது இரண்டாவது நிபந்தனையை அவர் இ்தன்போது குறிப்பிட்டார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

பல பகுதிகளில் நாளையும் கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை...

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...