கடந்த தினம் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறித்த பதவியில் இருந்து தொடர தீர்மானித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நிபந்தனைகளின் கீழ் இந்த தீர்மானத்தை எடுப்பதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதன்போது தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் மாத்திரம் பதவியில் நீடிப்பதே தனது முதலாவது நிபந்தனை என ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
ஏப்ரல் 05ஆம் திகதி ராஜினாமா கடிதத்தை கையளித்ததில் இருந்து பிரதி சபாநாயகர் பதவியின் சிறப்புரிமைகள் எதனையும் பயன்படுத்தப் போவதில்லை என தனது இரண்டாவது நிபந்தனையை அவர் இ்தன்போது குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நிபந்தனைகளின் கீழ் இந்த தீர்மானத்தை எடுப்பதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதன்போது தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் மாத்திரம் பதவியில் நீடிப்பதே தனது முதலாவது நிபந்தனை என ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
ஏப்ரல் 05ஆம் திகதி ராஜினாமா கடிதத்தை கையளித்ததில் இருந்து பிரதி சபாநாயகர் பதவியின் சிறப்புரிமைகள் எதனையும் பயன்படுத்தப் போவதில்லை என தனது இரண்டாவது நிபந்தனையை அவர் இ்தன்போது குறிப்பிட்டார்.