follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுசட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்த 68 பேர் கைது!

சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்த 68 பேர் கைது!

Published on

சட்டவிரோதமான முறையில் பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே எரிபொருள் சேகரிப்பு மற்றும் விற்பனை பிரதானமாக அனுமதிக்கப்பட்டுள்ளதால், எரிபொருளை வைத்து தனியாருக்கு விற்பனை செய்வது சட்டவிரோதமானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான எரிபொருள் இருப்புக்களை சேகரித்து விற்பனை செய்த இரண்டு குழுக்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்த 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களிடம் இருந்து 8025 லீற்றர் பெற்றோல் மற்றும் 726 லீற்றர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார்...