follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடு2 வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை

2 வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை

Published on

இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பங்களில் காணப்படும் டொலரொன்றின் பெறுமதிக்கமைய இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மருந்துகளின் விலைகளை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு தாம் ஒரு போதும் இணங்குவதில்லை என சுகாதார அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

டொலரொன்றின் பெறுமதிக்கு நிகராக விலைகளை திருத்தியமைத்து, நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தற்போது 40 முதல் 60 வீதமான மருந்துகளின் விலைகள் வர்த்தமானி ஊடாக கட்டுப்படுத்தப்படுவதாக ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர், வைத்தியர் ரசித விஜேவன்த தெரிவித்தார்.

டொலரொன்றின் பெறுமதி அதிகரித்ததையடுத்து, மருந்துகளின் விலைகளை 29 வீதத்தால் அதிகரிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...