follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுமருந்துகளின் விலை அதிகரிப்பு

மருந்துகளின் விலை அதிகரிப்பு

Published on

நிறுவனங்களினால் மருந்துகளின் விலை வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையில் நோயாளர்களும் தங்களது தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரம் தேசிய ஓளடத கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு உள்ள போதிலும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத நிலையில் அவர்கள் உள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.

மருந்துகளின் விலையை எம்மால் கட்டுப்படுத்த முடியாது.மக்களின் பிரச்சினைகளை மாத்திரமே எம்மால் கேட்க முடியும்.தற்போது மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வழமையாக மாதாந்தம் மருந்துகளுக்காக 3,000 செலவிட்ட மக்கள், தற்போது சுமார் 9,000 ரூபாவை செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபையும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.நிறுவனங்கள் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு டொலர் அவசியமாகவுள்ளது.நாணய கடிதங்களை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாணய கடிதங்களை விடுவிக்காமல் நாட்டுக்கு மருந்து பொருட்களை கொண்டு வரமுடியாது எனவும், அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...