வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்ல எதிர்பார்த்திருக்கும் அரச சேவையாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, அந்த பணியகத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து தமது தகவல்களை உள்ளடக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.