பொலிஸ் உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிரப்ப மக்கள் இடையூறு தர வேண்டாம்! -பொலிஸ் ஊடக பேச்சாளர்

731

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று எரிபொருள் பெறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொலிஸ் நிலைய வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்ப பொலிஸார் முயன்ற போது பொதுமக்களிடமிருந்து இடையூறுகளை எதிர்கொண்டதாக தெரிவித்த அவர் பொலிஸாருக்கு எரிபொருள் கோட்டா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாது என்றும் குறிப்பிட்டார்.

கலவரங்களைத் தடுப்பது, குற்றவாளிகளைக் கைது செய்தல், போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல், போக்குவரத்து ஒருங்கிணைப்பு போன்ற கடமைகளை நிறைவேற்ற வேண்டுமானால் பொலிஸாருக்கு எவ்வித இடையூறும் இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here