follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுபுகையிரத ஊழியர்கள் வேலைநிறுத்தம்

புகையிரத ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Published on

புகையிரத போக்குவரத்து சேவையாளர்களில் சிலர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

புகையிரத திணைக்களம் முறையற்ற வகையில் சேவையாளர்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதாக குற்றம் சுமத்தி இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என தொடருந்து தொழிலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் புகையிரதங்கள் தரிப்பிடங்களில் இருந்து அனுப்பி வைக்கும் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களின் அதிபர்கள் கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை காரணமாக, அவர்கள் கடமைகளிலிருந்து விலகியுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வால் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதத்தை விட僅தளமாக உயர்ந்துள்ளதால், இந்த மாதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை...

அணுசக்தி விபத்துகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பு

அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...