“முழு நாடும் கொழும்புக்கு” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகின்றது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கொழும்பை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.
“முழு நாடும் கொழும்புக்கு” போராட்டத்துக்கு அதரவு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கத்தினரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், கொழும்பு – காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டப் பகுதியில் பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.