புஸ்ஸலாவ தேயிலை தொழிற்சாலையில் தீ பரவல் : பெருந்தொகை தேயிலை சேதம்!

448

பிரிவிற்குட்பட்ட ரயிலன் தோட்டத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொழிற்சாலை ஏரிந்து நாசமாகியுள்து.

தீயை அணைக்க புஸ்ஸலாவ பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போதும் தீயினால் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ வீபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியபடவில்லை.மேலும் மின் ஒழுக்கின் காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ காரணமாக தொழிற்சாலையின் கட்டிடத்திற்கும், இயந்திரங்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் தயாரிக்கப்பட்டிருந்த பெருந்தொகை தேயிலையும் சேதமாகி உள்ளது.

இத் தீ விபத்து தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here