follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்ஆப்கானிஸ்தான் பள்ளிவாயிலில் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தான் பள்ளிவாயிலில் குண்டு வெடிப்பு

Published on

வடக்கு ஆப்கானிஸ்தான் நகரான ஹெராத் நகரில் உள்ள ஒரு பள்ளிவாயிலில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் உயர்மட்ட தலிபான் சார்பு மதகுரு ஒருவர் உட்பட பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார். தெரிவித்தனர்.

முஜிப் ரஹ்மான் அன்சாரி, அவரது காவலர்கள் சிலர் மற்றும் பொதுமக்கள் பள்ளிவாயிலை நோக்கிச் செல்லும் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குண்டுவெடிப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

சமீபத்திய மாதங்களில் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...