follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடு"ரயில்களின் வேகத்தினை அதிகரிக்க" இந்தியாவிடம் கடன் வாங்கவுள்ளோம்

“ரயில்களின் வேகத்தினை அதிகரிக்க” இந்தியாவிடம் கடன் வாங்கவுள்ளோம்

Published on

புகையிரத அமைப்பை மறுசீரமைப்பதற்காக இந்திய கடன் திட்டத்தை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“..10, 20, 30, 40 ஆண்டுகள் பழமையான தடங்கள் உள்ளன, அங்கு வேக வரம்பு 20-30 ஆக அமைக்கப்பட்டுள்ளது. தடங்கள் மேடு பள்ளமாக உள்ளன. விபத்துகள் ஏற்பட்டு உரிய நேரத்தில் இயக்க முடியாத நிலை உள்ளது. அவர்களை திறம்படச் செய்ய, இந்தியாவிடமிருந்து இந்தியக் கடன் திட்டத்தைப் பெற நாங்கள் நம்புகிறோம். அதேபோல், தனியார் முதலீட்டாளர்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கு வணிக முறைகளைப் பயன்படுத்துவோம் என்று நம்புகிறோம்..”

கடந்த காலத்தில் புகையிரத திணைக்களத்திற்கு வருடத்திற்கு 10 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

“..இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக ரயில்வே திணைக்களம் இப்போது மாதம் 1 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை எதிர்பார்க்கிறது. ஆனால், எரிபொருளின் விலையை மட்டுமே அதிலிருந்து எடுக்க முடியும்…”

LATEST NEWS

MORE ARTICLES

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...

பல பகுதிகளில் நாளையும் கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை...

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....