எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு புதிய லங்கா சுதந்திரக் கட்சியும் (நவ லங்கா நிதஹஸ் கட்சி) 43 படையணியும் இன்று (16) இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.
அதன்படி புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம மற்றும் 43 படையணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இன்று இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.