கொழும்பு பிரதான பேருந்து தரப்பிடத்திலிருந்து, சேவையில் ஈடுபடும் பேருந்துகள், பயண நேரம் வரையில் தரித்திருப்பதற்கான தற்காலிக இடங்களை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ரயில்வே திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களின் ஒரு பகுதியை தற்காலிகமாக விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – கோட்டையில் உள்ள ரயில்வே திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, 6 ஏக்கர் காணி தற்காலிகமாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.