follow the truth

follow the truth

May, 3, 2025
Homeவிளையாட்டுவெற்றியுடன் தொடரிலிருந்து விடை பெற்றது இலங்கை அணி

வெற்றியுடன் தொடரிலிருந்து விடை பெற்றது இலங்கை அணி

Published on

2021 உலகக்கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றையப்போட்டியில் 20 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் 190 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணிக்காக 41 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த சரித் அசலங்க போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவானார்.

இம்முறை உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெற தவறியுள்ளது.

இந்தநிலையில் இன்று தாம் பங்குபற்றிய இறுதி போட்டியில் கிடைத்த வெற்றியுடன் தொடரிலிருந்து விடை பெற்றது இலங்கை அணி.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...